செவ்வாய், 16 டிசம்பர், 2014

சங்கவை - என் அடுத்த புதினம்

விரைவில் வெளிவரவிருக்கும் 925 பக்கங்களைக் கொண்ட எனது புதிய நாவலின் அட்டைப் படம் இது. ஜனவரியில் நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வரவுள்ளது. அஞ்சல் மூலம் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னுடைய மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.



முற்றிலும் புதிய கதை உள்ளடக்கம், கதை வடிவம் கொண்ட இந்த நாவல் வாசகர்களைப் பரவலாகச் சென்றடையும் என நம்புகிறேன்.

ஐந்து வயதில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டபோது தலை முடியை இழுத்துக் காப்பாற்றிய அம்மா, பாட்டி ஊரில் தாமரைகள் நிறைந்த குளத்தில் நீச்சல் கற்றுக் கொடுத்தார்கள். வாழ்க்கையில் எதிர்நீச்சலில் அவர்களே தோளில் தூக்கிக் கொண்டு நடந்ததால் அந்த அனுபவம் வாய்க்கவில்லை. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக நெருப்பாற்றில் நீந்திக் கடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டபோது இலக்கிய வாசிப்பும், அதை எழுதுவதுமே கரை சேருவதற்குக் காரணியாகவும், கருவியாகவும் அமைந்தது. அம்மா தைரியம் கொடுத்தார்கள். இலக்கியத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு கூடவே நான் கற்பித்த சில மாணவர்களும் சேர்ந்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும், துன்பத்தில் துணை நின்ற சில சகோதரிகளுக்கும் இந்த நாவல் சமர்ப்பணம்.

1 கருத்து: